20 அக்டோபர், 2010

உடுமலைப்பேட்டையில் புகைப்படதாரர் சங்கம் நடத்திய போட்டோஷாப் கருத்தரங்கு

19-10-2010-அன்று தமிழ்நாடு உடுமலைப்பேட்டை நகரில் போட்டோஷாப் பற்றிய கருத்தரங்கு நடத்தப்பட்டது. உடுமலைப்பேட்‌டை போட்டோ, வீடியோகிராபர் நலச்சங்கம் இந்தக் கருத்தரங்க‌ை ஒருங்கிணைத்திருந்தனர். கணினி வரைகலைப் பயிற்றுவிப்பாளர் கோவை ஜெ.வீரநாதன் இந்தக் கருத்தரங்கில் விளக்கவுரை கொடுத்தார்.
போட்டோஷாப்பில் தற்போது புகைப்பட நிலையங்களில் பயன்டுத்தாத கருவிகள், கட்டளைகள் பற்றி விரிவான செயல்விளக்கம் கொடுத்தார். இவற்றை பயன்படுத்துவதால் கிடைக்கும் பலன்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
உடுமலைப்பேட்டை நகரத்திலிருந்து மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் ஏராளமான புகைப்படக் கலைஞர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக