10 நவம்பர், 2011

ஏன் இன்டிசைன்...?

ஏன் இன்டிசைன்...?

கணினி வரைகலையில் குறிப்பாக புத்தக வேலைகளுக்கான பக்க வடிவமைப்பிற்காக பயன்பாட்டில் இருந்துவந்த, தற்போதும் பயன்படுத்திக் கொண்டுள்ள அடோபி நிறுவனத்தின் பேஜ்மேக்கர் மென்பொருளில், ஏராளமான குறைபாடுகள் உள்ளன. இவற்றையெல்லாம் களைந்து, இன்னும் அதிகமான வசதிகளுடன் உருவாக்கப்பட்டதே இந்த இன்டிசைன் மென்பொருளாகும்.

பக்க வடிவமைப்பு மட்டுமல்லாமல், வெக்டார் வகையிலான படங்களையும் உருவாக்க இந்த இன்டிசைன் மென்பொருளில் பல வசதிகள் உள்ளன. அத்துடன் தலைப்பு எழுத்துக்களை அழகுபடுத்துவது, பின்புலனாக வண்ணங்களை நிறுத்துவது உள்ளிட்ட ஏராளமான, வரைகலை அம்சங்கள் இன்டிசைனிலேயே கொடுக்கப்பட்டுள்ளன.

அச்சுத்துறைக்கென்றே, அச்சுத்துறைக்குத் தேவையான, அதில் பயன்படுத்தப்பட்டுவரும் பல்வேறு அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளதாகவும் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக அச்சுத்துறையில் தற்போது புழக்கத்தில் உள்ள பாலிமாஸ்டர் வேலைகளிலிருந்து கம்ப்யூட்டர் டூ பிளேட் வகையான வேலைகள் அல்லாமல், நேரடியாக கம்ப்யூட்டர் டூ பிரிண்ட் தருகின்ற டிஜிட்டல் பிரிண்டிங் வரையிலான வேலைகளும் செய்யப்படுகின்றன. இவை அனைத்திற்கும் ஏற்ற பல செயல்பாடுகள் இன்டிசைனில் உள்ளன.

அத்துடன் தற்போது பெரிய அளவில் பேசப்படுவதுடன், செயல்பாட்டிலும் கொண்டுவரப்பட்டுள்ள ஈ-பப்ளிகேஷன் எனப்படும் மின் பதிப்பு முறைக்குத் தேவையான மின்னூல்களை (-புக்ஸ்) உருவாக்குவதற்கு வேண்டிய பல்வேறு வசதிகள் இந்த இன்டிசைனில் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த மின்னூலுக்கு அடிப்படையான போர்டபிள் டாக்குமென்ட் ஃபார்மேட் எனப்படும் பீடிஎஃப் வகை கோப்புகளை உருவாக்குவது என்பது இன்டிசைனில் மிகவும் எளிமைபடுத்தப்பட்டுள்ளது. அதற்காக சிறப்புக் கட்டளைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆனந்தவிகடன் குழுமத்தின் அனைத்து இதழ்கள் மற்றும் குமுதம் உள்ளிட்ட பல்வேறு வார இதழ்களும், தினகரன், தினத்தந்தி உள்ளிட்ட நாளிதழ்களும் தற்போது இன்டிசைனை பயன்படுத்தியே தங்களது வடிவமைப்பை செய்து முடிக்கின்றனர். மேலும் சென்னையில் கணினி வரைகலை வடிவமைப்பாளர்களிடையே இந்த இன்டிசைன் பெரிய அளவில் புழக்கத்தில் உள்ளது.

2000ஆவது வருடத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இன்டிசைனின் 1வது பதிப்பைத் தொடர்ந்து தற்போது 6வது பதிப்பு இன்டிசைன் சிஎஸ்4 என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது. அத்துடன் இதன் 10ஆவது ஆண்டு நிறைவில், 12-04-2010 அன்று 7வது பதிப்பு சிஎஸ் 5 என்றும் வெளியிடப்பட்டு இப்போது சிஎஸ்6 பதிப்பு தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அச்சுத்துறைக்கான பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ள இந்த இன்டிசைனை முறையாக பயின்று பலனடைவதற்காகவே நமது பயிலகம் மூலம் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

இந்தப் பயிற்சியின் முடிவில், தற்போது பயன்பாட்டில் உள்ள பேஜ்மேக்கர் மற்றும் கோரல்டிரா ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து இன்டிசைனை மட்டும் பயன்படுத்த முடியும்.

தற்போது பயன்பாட்டில் உள்ள மென்பொருளில் உள்ள குறைபாடுகள் :

- அதிக பக்கங்கள் உள்ள வேலையை சேவ் செய்து வைத்திருந்தால், மறுபடியும் துவக்கம்போது, தொல்லை தருகிறது.

- தானாக பக்க எண்கள் அமைப்பு கொடுப்பது கடினமானது.

- ஒரே வேலையில் வேறு வேறு தொடர்ச்சியான பக்க எண்கள் வரவழைப்பது இயலாது.

- ஒரு முறை நிறுத்திய படத்தை மாற்றுவதற்கு, அல்லது மாற்றங்கள் கொடுப்பதற்கு அதனை டெலிட் செய்துவிட்டு மீண்டும் இம்போர்ட் செய்தே நிறுத்த வேண்டும்.

- நமது வேலையில் உள்ள தவறுகளை அறிய முடியாது.

- வேரியபிள் டேட்டா என்பது மிகவும் குறைவான அளவிலேயே செயல்படுகிறது. இதனால் அடையாள அட்டை போன்ற புகைப்படங்களை இணைக்கும் வேலைகளைச் செய்ய முடிவது இல்லை.

- திரையில் காட்டப்படும் வண்ணங்களும் அச்சில் கிடைக்கும் வண்ணமும் வேறுவேறாக உள்ளன.

- -புக் எனப்படும் மின்னூல் உருவாக்கத்திற்குத் தேவையான பல வசதிகள் கிடையாது. பீடிஎஃப்பாக மட்டும் மாற்ற முடியும். அனிமேஷன் வசதிகள் கொடுக்க முடியாது.

- இணையப் பக்க வடிவமைப்பிற்காக செயல்படுவது சிரமம்.

- ஆட்டோபேக்கப் மற்றும் பேக்கப் நடக்கும்போது வேறு செயல்களைச் செய்ய முடியாது.

- பேக்கப் நடக்கும்போது மின்தடை ஏற்பட்டால் ஃபைலே கரெப்ட்டாகிவிடுவதும் உண்டு. அதாவது செய்து வைத்த வேலை முற்றிலுமாகக் கொட்டுப் போகிறது.

- இரவு வேலையை முடித்துவிட்டு மறுநாள் காலை ஃபைலைத் துவக்கினால் வெள்ளையாக ஒரு பக்கம் மட்டுமே காட்டப்படும் நிலை பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஃபைல் சைஸ் அதே அளவு உள்ளது.

- வேலை செய்து கொண்டிருக்கும்போது டெர்மினேட் ஆனால், அதுவரை செய்தவை டெலிட் ஆகிவிடுகின்றன.

இதுபோன்ற தொல்லைகள் எதுவும் இன்டிசைனில் கிடையாது.

குறிப்பு : நாம் இன்டிசைனை சந்தைப்படுத்துவதற்காகவோ, விளம்பரப்படுத்து வதற்காகவோ அதற்குப் பரிந்து பேசவில்லை. எங்களது புத்தகங்கள் தயாரிப்பு மற்றும் பிற வடிவமைப்புகளை இன்டிசைனிலேயே தயாரிக்கின்றோம். எளிமையாகவும் முழுமையாகவும் உள்ளது. யாமறிந்த மென்பொருட்களில் இன்டிசைனைப் போல எளிதானதெங்கும் காணோம் என்பதாலும், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கத்தினாலும் இதனைக் கொடுக்கின்றோம்.

வடிவமைப்பாளர்கள் கிடைக்காத இந்த நாட்களில், உரிமையாளர்கள் எளிதாக பயிலுவதற்கு இதுவே மிகப் பொருத்தமான மென்பொருளாகும்.